Wednesday, June 30, 2010

Gotabaya accepts KPs assistance to him

கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதனே தனக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்தார் என, இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாய ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.

பி.பி.சி உலக சேவைக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

புலம்பெயர் நாடுகளில் இருந்து கே.பியின் ஏற்பாட்டில் கொழும்பு வந்து தம்மைச் சந்தித்தவர்கள், தம்முடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருப்பதாக, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Read More..

Tuesday, June 29, 2010

LTTE new statement

போராளிகளை விடுவிப்பதற்கும், தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும், புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை இலங்கை அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது, என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராமு சுபன் என்பவர் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
29/06/2010

அன்பான தமிழ் பேசும் மக்களே! Read More..

Sunday, June 27, 2010

Political negotiations is the only resolution for lanka issue-Eric Solheim

கொழும்பு: இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதானத் தூதராக செயல்பட்டவர் எரிக் சோல்ஹெய்ம். நார்வே நாட்டு அமைச்சர்.

ஈழப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவர் கூறுகையில், "பொருளாதார ரீதியாக இலங்கை முன்னேற வேண்டுமென்றால் இனப் பிரச்னைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" Read More..

More military camps in Tamil areas

கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தமிழர் பகுதிகளில் புதிதாக ராணுவ முகாம்கள் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


இத்தகவலை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்ததாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. Read More..

Thursday, June 24, 2010

Sri Lanka rejects UN war crimes panel

கொழும்பு: ஐக்கியநாடுகள் சபை செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள விசாரணைக் குழுவை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர்களை இலங்கைக்குள் அனுமதிக்கவும் மாட்டோம் என்று இலங்கை வெளியுற அமைச்சர் ஜி. எல். பெரீஸ் தெரிவித்துள்ளார்.


வெளி விவகார அமைச்சகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியது:

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள விசாரணைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விஷயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். Read More..

Bomb blast in Colombu 9 injured

கொழும்பு: கொழும்பு நகரில் வியாழக்கிழமை காலை குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

பேட்டா என்ற இடத்தல் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் ஆப்பிள் கடைக்கு அருகே இன்று காலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ராணுவ வீரர் ஒருவர் கையில் வைத்திருந்த கிரனைட் குண்டு தவறுதலாக வெடித்ததாக போலீசார் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் புலிகளுக்கு தொடர்பில்லை என்று ராணுவம் கூறியுள்ளது. Read More..

Kumaran Padmanathan will be accepted as approver

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை மாநாட்டில் வைத்து, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read More..

Wednesday, June 23, 2010

UNO appoints committee to inquire war crime in Lanka

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது சிங்கள ராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மர்சுகிட தருஷ்மேன், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த யாஸ்மின் சோகோ, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன்ரட்னர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். Read More..

Tuesday, June 22, 2010

Nobody has pressurized me to attend Tamil meet - Sivathambi

சென்னை: கோவையில் நாளை துவங்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தனக்கு எந்தவித அழுத்தங்களும் தரப்படவில்லை என்று தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.

செம்மொழி மாநாட்டில், முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்துள்ளார் பேராசிரியர் சிவத்தம்பி.

மாநாட்டில் கட்டாயம் சிவத்தம்பி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பங்கேற்கா விட்டால் அது நாதஸ்வரம் இல்லாத கல்யாணம் மாதிரியாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதியே மீண்டும் மீண்டும் சிவத்தம்பிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. Read More..

Srilanka opposes to UNO committee to inquire human rights violation

கொழும்பு: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை குழு அமைப்பதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஐநா கூறிய பிரச்னைகளை அரசு உரிய வகையில் அணுகி தீர்வு கண்டுவரும் நிலையில் இத்தகைய குழு தேவையற்றது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் தெரிவித்தார்.

2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசு மீது கடுமையான புகார் எழுந்தது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. Read More..

Thursday, June 17, 2010

Prabhakaran mother health condition becomes very weak

கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பார்வதி அம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் முசிறிக்கு வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார். பிறகு அவர் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு போரின் போது இடம் பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களுடன் பார்வதி அம்மாளும், அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். Read More..

Wednesday, June 16, 2010

Panruti S. Ramachandran exposed the truth in Douglas case

மிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, மத்திய அரசு விருந்தாளியாக வரவேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூட்டில், "இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலமே எனக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டது!" எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு பறந்திருக்கிறார் டக்ளஸ்!


இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போதைய தே.மு.தி.க. அவைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி. Read More..

US praises Rajapaksa

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் வென்ற ராஜபக்சேவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முக்கிய பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More..

Monday, June 14, 2010

Seeman statement on Rail blast case

சென்னை: விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில், உண்மை என்னவென்று கண்டறியக் கூட முற்படாமல், ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மீது பழிபோடுவதிலேயே அரசு குறியாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் விடுத்த அறிக்கை:

"விழுப்புரம் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும். Read More..

Sunday, June 13, 2010

Union govt relaxed conditions for Parvathi Ammal

சென்னை: பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம், உறவினர் - நண்பர்களைச் சந்திக்கலாம். ஆனால் புலிகள் ஆதரவு அரசியல் பிரமுகர்களை மட்டும் சந்திக்கக் கூடாது, என்று தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 தேதியிட்டு - மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள். Read More..

No pressure from India in Tamils resettlement

கொழும்பு: ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எவ்வித நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் (படம்) தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் மறுவாழ்வு விவகாரம் இந்தியா அவரிடம் வலியுறுத்தியாதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து பெரீஸ் கூறுகையில், "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. Read More..

Friday, June 11, 2010

Who behind douglas devanannda escape

போபால் விஷவாயு வழக்கில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று கேள்வி எழுந்தது போல் தமிழக அளவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தப்பவிட்டது யார் என்ற கேள்வி எழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இலங்கையின் பாரம்பரிய மற்றும் சிறுதொழில்கள் துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருக்கிறார். அவர் தற்போது இலங்கை அதிபர் ராஜபக்சே குழுவுடன் இந்தியா வந்துள்ளார். டக்ளஸ் தேவானந்தா மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை காவல்துறையில் நிலுவையில் உள்ளது. அப்போது அவர் தேடப்படும் குற்றவாளி என்று சென்னை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். Read More..

Thursday, June 10, 2010

Vijaykanth Statement on Eelam Peoples death

சென்னை: தமிழர்களின் படுகொலை மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதால், அதனடிப்படையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலாது.

இலங்கை தமிழர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம். Read More..

India pardoned me says Douglas

டெல்லி: ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் இன்று (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், "இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது" என்றார். Read more..

Wednesday, June 9, 2010

General amnesty for kumaran padmanathan

கொழும்பு: கே பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு அரசுப் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுலக் தொடர்பாளர் குமரன் பத்மநாபன், அரசாங்க சாட்சியாக மாறி, புலிகளின் சொத்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. Read More..

Douglas Devananda may arrest in India

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்துள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read More..

Tuesday, June 8, 2010

Fresh attack on Rameshwaram fishermen

ராமேசுவரம்: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அனுப்பினர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 7-ம் தேதி சுமார் 800 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி இவை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. Read More..

Prabhakaran is my only leader says Ramasamy

கோலாலம்பூர்: பிரபாகரன் மட்டுமே என் தலைவன். இந்தியாவுக்கு நான் வரக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது குறித்து எனக்குக் கவலையில்லை...", என்று கூறியுள்ளார் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி.

முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துப் பேசியதாலும், ஈழப் போர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியதாலும் ராமசாமி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய உள்துறைக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். Read More..

Gotabaya threats Fonseka

லண்டன்: போர் குற்றங்கள் பற்றி சாட்சியம் அளித்தால் சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம், என்று ராஜபக்சேவின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து, விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா. 59 வயதான இவர், போர் முடிவுக்கு பின்னர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் தீவிர பங்கு கொண்டார். Read More..

Monday, June 7, 2010

Vaiko Protest Against Rajapaksa on visiting Tamilnadu

சென்னை: இந்தியா வரும் கொடுங்கோலன் ராஜபக்சேவை எதிர்க்க தமிழர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், "இலங்கையில் எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்கள சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும் போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது. Read More..

Sunday, June 6, 2010

Seeman announces protest against Rajapaksa

சென்னை: ஜூன் 8-ம் தேதி செவ்வாய்கிழமை இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கூறினார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. Read More..

Rajapaksa himself keeps away from IIFA

கொழும்பு: ஐஃபா விழாவின் முக்கியமான இறுதி நாள் நிகழ்வில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கவில்லை!

தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தென்னிந்திய திரையுலகினரின் கடும் எதிர்ப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கலையிழந்து மாபெரும் தோல்வியைத் தழுவிய ஐஃபா விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடந்தன. இதில்தான் மதிப்புக்குரிய ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள். Read More..

Vaiko slams Rajapaksa

தமிழ்க் குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி ராஜப‌க்சே எ‌ன்று‌ கடுமையாக சாடியுள்ளார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் அதிபர் ராஜபக்சே,

அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர். Read More..

May 17 movement appeals to boycott Airtel

அழிப்புக்கு துணைபோகும் வகையில் ஐஃபா விழாவை நடத்தும் ஃபிக்கி அமைப்பின் தலவைர் ராஜன் பார்தி மிட்டலின் ஏர்டெல் சேவையைப் புறக்கணிப்போம் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் - கொழும்பிலிருந்து புத்தளம் வரை - செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்கோது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. Read More..

Thursday, June 3, 2010

Vaiko owes to achieve Eelam

தஞ்சை: சிங்களவர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார். Read More..

Srilanka urges NDTV to withdraw its documentary

சென்னை: ஈழத் தமிழர் நிலை குறித்து என்டிடிவி ஒளிபரப்பிய டாகுமெண்டரி படத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசு கோரிக்கை வி்டுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் என்.டி.டி.வி. சமீபத்தில் 'பிளட் ஆன் வாட்டர்' என்ற தலைப்பில் செய்திப் படம் ஒன்றை வெளியிட்டது.

இதில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவசம், என்டிடிவி நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். Read More..

Black flag to Rajapaksa says Pazha Nedumaran

ஜூன் 8ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு எதிராக சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கையில்,

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார். Read More..

Naam organisation ask rehabilitation reconstruction in Lanka

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், இலங்கை அதிபர் ஜூன் 8இல் இந்தியாவிற்கு வருகை புரியும் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் திட்டங்களை வலியுறுத்த வேண்டும் என்று நாம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து நாம் அமைப்பின் தலைவர் ரவி, செயலர் சதாசிவம், நிறுவனர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்தியில். Read More..

Wednesday, June 2, 2010

It is our fight says Ka Sivathambi on Eelam struggle

யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகவும் அங்கு பேசப்படவுள்ள இலங்கை விடயங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read More..

Tuesday, June 1, 2010

How is Parvathi Ammal

சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். Read More..

Srilanka firm on IIFA event

கொழும்பு: என்ன தடைகள், இடையூறுகள் வந்தாலும் ஐஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்தியே தீருவோம் என இலங்கை சுற்றுலா விரிவாக்கல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக தற்போது இந்திய அளவில் பெரும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த பிரிவின் பிரதிநிதி திலீப் முதாதெனிய தெரிவித்துள்ளார்.

ஐஃபா விருது வழங்கும் நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டின் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவது குறித்தும் கேட்கப்பட்டது. Read More..