Tuesday, July 20, 2010

No special ambassador needed srilanka insisted india

இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். Read More..

Balakumaran yogaratnam killed by srilankan army in the last leg of war

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது இலங்கை படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரத்னம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் இலங்கை படையினரிடம் சரணடைந்திருந்தனர். Read More..