Wednesday, May 26, 2010

Seeman request to Karunanidhi

மலேசியாவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. Read More..

Protests begin against Indo-SL trade pact

இந்தியாவுடனனான 'சீபா' (Comprehensive Economic Partnership Agreement CEPA) உடன்படிக்கையில் கையழுத்திட வேண்டாம் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீபா எனப்படுகின்ற இந்த உடன்படிக்கை இலங்கையை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் இலங்கை கையெழுத்திட்டால், இலங்கையின் வர்த்தகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், உள்ளாட்டு வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் பாதிப்படைவர் என தெரிவிக்கப்படுகிறது. Read More..