Sunday, June 6, 2010

Seeman announces protest against Rajapaksa

சென்னை: ஜூன் 8-ம் தேதி செவ்வாய்கிழமை இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கூறினார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. Read More..

Rajapaksa himself keeps away from IIFA

கொழும்பு: ஐஃபா விழாவின் முக்கியமான இறுதி நாள் நிகழ்வில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கவில்லை!

தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தென்னிந்திய திரையுலகினரின் கடும் எதிர்ப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் கலையிழந்து மாபெரும் தோல்வியைத் தழுவிய ஐஃபா விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடந்தன. இதில்தான் மதிப்புக்குரிய ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன, சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள். Read More..

Vaiko slams Rajapaksa

தமிழ்க் குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி ராஜப‌க்சே எ‌ன்று‌ கடுமையாக சாடியுள்ளார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் அதிபர் ராஜபக்சே,

அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர். Read More..

May 17 movement appeals to boycott Airtel

அழிப்புக்கு துணைபோகும் வகையில் ஐஃபா விழாவை நடத்தும் ஃபிக்கி அமைப்பின் தலவைர் ராஜன் பார்தி மிட்டலின் ஏர்டெல் சேவையைப் புறக்கணிப்போம் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் - கொழும்பிலிருந்து புத்தளம் வரை - செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்கோது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. Read More..