Thursday, May 27, 2010

Naam Tamilar opposes SriLankan Minister In Tamilnadu

வேளாங்கண்ணி: இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதாவுக்கு நாம் தமிழர் இயக்கம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை கப்பல் துறை அமைச்சர் தயா ஸ்ரீதா விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். Read More..

Lest We Forget: Tamil Remembrance Day

போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிங்கள பேரினவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட முதலாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வட கலிபோர்னியாவைச் சேர்ந்த தமிழர்கள் மே 22 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.

இந்த நினைவாஞ்சலியில் இனப்படுகொலைகளைச் சந்தித்த ஆர்மீனியன், ருவாண்டன், குர்தீஸ் மற்றும் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. Read More..

Group of Ministers visits Kilinochi

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டது இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு.

வீடு அமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழுவுக்கும், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடந்தது. Read More..